டோம்பிவ்லி:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ரூபாயில் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பிரசவம் பார்க்கப்பட்டது.
மஹராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி ஒருவர், காமா மருத்துவமனையை நோக்கி ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டதால், டோம்பிவ்லி ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பிரசவம் பார்க்கப்பட்டது.
ரயில்நிலையத்தில் ஒரு ரூபாய் டோக்கனில் மருத்துவர்களும் நர்சுகளும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு சுக பிரசவமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.