புதுடெல்லி:
டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடியின்போது போலீஸ் ஒருவர் தனியாக மாட்டிக்கொண்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலை., மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டம் கலவரமாக மாறியது.
இன்றும் டெல்லியில் மாணவர்கள் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சீலாம்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தில் போலீசார் மீது கல்வீச்சு நடைபெற்றது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது தனியாக சிக்கிய போலீஸ் ஒருவரை லட்டியை பிடிங்கி மாணவர் ஒருவர் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Protesters target Delhi Police during anti-#CAAProtests in Delhi's Seelampur area
LIVE updates 👇https://t.co/tZp6mZkfm3 pic.twitter.com/luBFeDpGNp
— Times of India (@timesofindia) December 17, 2019