டெல்லியில் 10 மாணவர்கள் கைது

டெல்லியில் 10 மாணவர்கள் கைது

புதுடெல்லி:

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக கலவரம் தொடர்பாக குற்றப்பின்னணி கொண்ட 10 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் வாகனங்களும் எரிக்கப்பட்டு கல்வீச்சு நடந்ததால் போலீசார் ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் பேருந்துகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.

மாணவர்கள் மீது நடத்திய தடியடி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி கொண்ட 10 பேரை டெல்லி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்