டெல்லியில் துப்பாக்கிச்சூடு

டெல்லியில் துப்பாக்கிச்சூடு

புதுடெல்லி:

டெல்லியில் வழக்கறிஞர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்தார்.

டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது வழக்கறிஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வழக்கறிஞர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.  நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இந்த மோதல்  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்