தூக்கு தேதி மாற்றம்

தூக்கு தேதி மாற்றம்

புதுடெல்லி:

நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வழக்கில், 4 குற்றவாளிகளுக்கும் ஜனவரி 22-ம் தேதி தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைய டுத்து, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி முகேஷ் குமார் சிங் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், கருணை மனு பரிசீலனையில் இரு க்கும்போது தண்டனை நிறைவேற்றப்படாது. எனவே வரும் 22ம் தேதி தூ க்குத்தண்டனையை நிறைவேற்ற மாட்டோம் என அறிக்கையை சிறை அதிக £ரிகள் எனக்கு வழங்கவேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவ £ளிகளில் ஒருவரான முகேஷ் சிங், கருணை மனுவை அனுப்பியிருந்த நிலையில், அதனை ஆளுநர் மற்றும் ஜனாதிபதியும் நிராகரித்தனர்.

இதனையடுத்து, நிர்பாயா குற்றவாளிகளான 4 பேருக்கு தூக்கிலிடும் ஆணையை பிறப்பிக்க திகார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்துக்கு கே £ரிக்கை விடுத்தது. இதனை ஏற்று 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்