டில்லிக்கு ராணுவத்தை அழைக்க வேண்டும்: கெஜ்ரிவால்

டில்லிக்கு ராணுவத்தை அழைக்க வேண்டும்: கெஜ்ரிவால்

டில்லி வன்முறையை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ராணுவத்தை அழைக்க வேண்டும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து டில்லியில் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கவர்னர் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: டில்லியில் இரவு முழுவதும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினேன். சூழ்நிலை அபாயகரமானதாக உள்ளது.

டில்லியில் எவ்வளவு முயற்சி செய்தும், போலீசாரால் கட்டுப்படுத்தவில்லை. ராணுவம் உடனடியாக அழைக்கப்பட வேண்டும். மற்ற பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்