புதுடெல்லி:
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் விளம்பரங்களை ஒளிபரப்ப தொலைகாட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நடந்த மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மத்திய அரசை பகைத்துக்கொண்ட அவரது ‘சாப்பக்’ திரைப்படத்திற்கு எதிரான சமூக வலைத்தளங்களில் ஹாஸ்டேக்குகள் பரப்பப்பட்டன. இதனால் அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
அடுத்தகட்டமாக அவரது விளம்பரங்கள் புறக்கணிக்க வேண்டுமென மீண்டும் ஹாஸ்டேக்குகள் பரப்பப்பட்டன. தீபிகா படுகோன் 20 நிறுவனங்களுக்கு மேல் விளம்பர தூதராக உள்ளார். இதில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
இந்நிலையில், தொலைக்காட்சிகளில் சில நாட்களுக்கு அவரது விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என விளம்பர நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், புதிதாக எந்த விளம்பர நிறுவனமும் தங்கள் விளம்பர தூதரராக நியமிக்க அஞ்சுவதாகவும் தெரிகிறது.