சென்னை:
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தீபா கூறுகையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறும், உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன், அதிமுகவுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர். பல சோதனைகளை தாண்டி இயக்கத்தை நடத்தி வந்தேன். போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும் எனவும் ஜெ.தீபா தெரிவித்தார்.