கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு

கோவை:

கோவையில் சிறுமி பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகில் உள்ள பன்னிமடை பகுதியில், கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நடந்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் குற்றம் நிரூபணமானதால், குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிவு 302 கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்