இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக முஷாரப் இருந்தார். தேசத் துரோக வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.