உணவில் செத்த எலி; 9 மாணவர்கள் மயக்கம்

உணவில் செத்த எலி; 9 மாணவர்கள் மயக்கம்

முசாபர்நகர்:

உத்தரச பிரதேச மாநிலத்தில் பள்ளியின் மதிய உணவில் எலி இறந்து கிடந்ததால், 9 மாணவர்கள், ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் பள்ளி ஒன்றில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. முதலில் சாப்பிட்ட 9 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் இறந்த எலியை அவர்களது உணவில் இருப்பதை கண்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கம் வருவதாக தெரிவிக்கவே அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து நல்ல முறையில் அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான பள்ளி மீது மாவட்ட நிர்வாகம் வழக்குபதிவு செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்