பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே குடும்ப பிரச்சனையில் மாமியார் தலையை மருமகள் கடித்து குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உடுமலை சாலையில் உள்ள மின்நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராக இருந்து வருகிறார். இவரின் மகன் சரவணகுமாரின் மனைவி கல்பனா. கல்பானாவுக்கு அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மாமியார் நகேஸ்வரியிடம் வழக்கம் போல கல்பனா சண்டையில் ஈடுபட்டுள்ளார். அந்த சண்டை அதிகமாகி மாமியார் நாகேஸ்வரியின் தலையை கடித்து குதறியுள்ளார். வலி தாங்காமல் அலறியதால் அக்கம்பக்கத்தினர் நாகேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் மருமகள் கல்பனானை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.