பாரிஸ்:
தீவிரவாதிகளுக்க எதிராக போதுமான நடவடிக்கை எடுக்காததால், பாகிஸ்தான் நாட்டுக்கு தீவிரவாத தடுப்பு அமைப்பு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரிஸ் நகரில் தீவிரவாத தடுப்பு அமைப்பான நிதிச்செயல் பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) கூட்டம் நேற்று தொடங்கியது. வரும் 18ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பின் கடும் நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கையாக ‘டார்க் க்ரே’ பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.