திருநங்கைகளுக்கு சீர்வரிசை; ‘தர்பார்’ கொண்டாட்டம்

  • In Cinema
  • January 9, 2020
  • 265 Views
திருநங்கைகளுக்கு சீர்வரிசை; ‘தர்பார்’ கொண்டாட்டம்

ஒசூர்:

ஒசூரில் ரஜினியின் தர்பார் திரைப்பட வெளியீட்டின்போது சமத்துவ பொங்கல் வைத்து, திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கி ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது தர்பார் திரைப்படம். பொங்கலை குறிவைத்து ரிலிஸான தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதால் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரஜினி ரசிகர்கள் சார்பில் தர்பார் திரைப்பட ரிலிஸை வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரையரங்கிற்கு உள்ளாகவே அனைத்து மதத்தவரும் கரும்பு, பொங்கல் பானை அமைத்து சமத்துவ பொங்கலை சமைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தர்பார் திரைப்படத்தில் திருநங்கைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒசூர் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு புடவை உள்ளிட்டவை சீராக வழங்கப்பட்டது.

இதுக்குறித்து பேசிய திருநங்கைகள், படத்தில் மூன்றாம் பாலினத்தாருக்கு பாட வாய்ப்பு வழங்கியதன் மூலம், திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், ரஜினிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்ட அவர்கள் தர்பார் வெற்றியடையவும் வாழ்த்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்