சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
‘தர்பார்’ படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மலேசியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ரூ.23 கோடி கடனை திருப்பி வழங்காமல் படத்தை வெளியிடக் கூடாது என மலேசிய நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரூ.4 கோடியே 90 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் வரை படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது என- நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.