ஆபத்தான மின் கம்பங்கள்

ஆபத்தான மின் கம்பங்கள்

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சீர் செய்திட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் ஆபத்தான முறையில் காட்சி அளித்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், மேலும் மழைக்காலங்கள் தொடங்க உள்ளதால் மின்கம்பங்களில் கான்கிரீட் உடைந்து விழுந்து இரும்பு கம்பிகள் மட்டும் காட்சியளிக்கின்றன.

பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வான இடங்களிலும், மேலும் பல இடங்களில் வயர்கள் விழாமல் இருக்க கட்டை, விறகு உள்ளிட்டவைகளின் உதவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் காற்று மற்றும் மண் சரிவினால் கம்பங்கள் சாய்ந்தோ வயர்கள் விழுந்தோ அசம்பாவிதங்கள் ஏற்ப்பட்ட பின் நடவடிக்கை எடுப்பதை விட முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்திட முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்