மாற்றுத்திறனாளி டான்சர் செந்தில் தற்கொலை..!

  • In Cinema
  • May 16, 2019
  • 178 Views
மாற்றுத்திறனாளி டான்சர் செந்தில் தற்கொலை..!

சென்னை:

ராகவா லாரன்சுடன் பணியாற்றிய நடனக்கலைஞர் செந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் நண்களுடன் வதித்துவந்துள்ளார் நடனக்கலைஞர் செந்தில், மாற்றுத்திறனாளியான இவர் சுமார் 1000 நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார்.

மின்சாரக்கனவு படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த இவர், ராகவா லாரன்சுடன் தொடர்ந்து பணியாற்றி வந்தவர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் குழந்தைகளுக்கு இவர் தான் நடனப்பயிற்சி கொடுத்துவருகிறார்.

மாற்றுத்திறனாளியாக உள்ள இவருக்கு திருமணம் ஆகாததாலும், நனப்பயிற்சியில் தொடர்ந்து சாதிக்க முடியவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு நண்பர்களோடு தூங்கச்சென்ற அவர் காலையில் பார்த்தபோது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்