மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு

மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு

சென்னை:

புத்தாண்டு தினத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா சிலிண்டர் விலை, 14.2 கிலோ ரூ.19 அதிகரிக்கப்பட்டு, ரூ.734 ஆக சென்னையில் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் 3 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில், 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், கிலோ லிட்டருக்கு ரூ.66,226 உயர்த்தப்பட்டுள்ளது.

விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருளின் விலையும் 2.61 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணைய் விலை உயர்வே இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்