சென்னை:
புத்தாண்டு தினத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா சிலிண்டர் விலை, 14.2 கிலோ ரூ.19 அதிகரிக்கப்பட்டு, ரூ.734 ஆக சென்னையில் விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் 3 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில், 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், கிலோ லிட்டருக்கு ரூ.66,226 உயர்த்தப்பட்டுள்ளது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருளின் விலையும் 2.61 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணைய் விலை உயர்வே இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.