நகரி:
பெண்கள் மற்றும் சிறுவன் என மூன்று பேரை கொலை செய்த வேலூரை சேர்ந்த சைக்கோ நபரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டி கடந்த ஜுன் மாதம் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது பற்றி போலீசார் விசாரித்ததில், வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் மூதாட்டியை கொன்றது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் தமிழகத்தில் ஏற்கெனவே 2 கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த சைகோ கொலைகாரனை சிறையில் அடைத்தனர்.