உடல் ஆரோக்கியத்துக்கு சைக்கிள் பேரணி

உடல் ஆரோக்கியத்துக்கு சைக்கிள் பேரணி

ஒசூர்:

ஒசூர் அருகே உடல் ஆரோக்கியம் காக்க சைக்கிள் பயன்படுத்த வலியுறுத்தி ஊர £ட்சி மன்ற தலைவர் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சைக்கிள் பயன்படுத்திய காலத்தில் சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பிர ச்சனைகளை சந்திக்காத சமூகமாக இருந்து வந்த நிலையில், நவீன மயமாகி வரும் இத்தலைமுறையினர் சைக்கிளை பயன்படுத்தாமல், உடலை குறைக்கவும் மிடுக்கான உடல் அமைப்பை பெற உடற்பயிற்சி கூடங்களில் மணி கணக்கில் செலவிட்டு வருகின்றனர்.

எரிபொருள் இல்லாத வாகனமான சைக்கிளை இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் பயன்படுத்தினால் வாகன புகை உள்ளிட்டவை குறைக்க முடியும், உடல் ஆரோக்கியத்தை காக்க முடியுமென வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் 30க்கும் மேற்ப்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் சைக்கிள் பேரணியாக முக்கிய வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர், மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேரணி நிறைவுற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்