இஸ்லாமாபாத்:
பிரதமர் மோடியை பற்றி மேடையில் அவதூறாக பேசியபோது, பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக் பாயும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியாவுடனான வர்த்தகம், போக்குவரத்து, வான் எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீது அகமதுவும், சில நாட்களுக்கு முன், ‘‘செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும். இதுவே இந்தியா உடனான இறுதிப்போராக அமையும்’’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இது ஒருபுறம் இருக்க, இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து மோடியை அவதூறாக பேசும் போது, அவர் மீது லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனே பதறியடித்து தொடர்ந்து பேசிய அவர், ‘‘மோடி அவர்களே நீங்கள் என்ன செய்தாலும் இந்த கூட்டத்தை தடுக்க முடியாது’’ என வேடிக்கையாக சொன்னதும் அங்கிருந்தவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.
இந்நிலையில், அமைச்சர் ஷேக் ரஷீது அகமது பேசும் வீடியோ, தற்போது இணையத்தில் வைராகியதால் நெட்டீசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
#Pakistan railway minister suffers electric shock from mic while addressing a rally during #KashmirHour, just after he mentions PM Modi in the speech. 😁
These are probably signs from God, urging #Pakistan to stop this non-sense. Please listen!🤣 @gauravcsawant @bhartijainTOI pic.twitter.com/N3fcqjPrhN
— NooriBadat (@NooriBadat) August 30, 2019