மாமல்லபுரம்:
கடற்கரை கோவிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் பார்வையிட்டனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நிகழ்ச்சிகளை ரசித்து வருகின்றனர்.
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலைநிகழ்ச்சியில், பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்கள் இடம்பெறவுள்ளன.
பாரம்பரிய கலையான நாட்டியம் குறித்து அறிமுக உரை சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.