சென்னை சேப்பாக்கத்திக்கு வருகை தரும் தோனி, ரெய்னா.., தேதிகளை அறிவித்த அணி நிர்வாகம் !!

  • In Sports
  • August 12, 2020
  • 189 Views
சென்னை சேப்பாக்கத்திக்கு வருகை தரும் தோனி, ரெய்னா.., தேதிகளை அறிவித்த அணி நிர்வாகம் !!

கொரோனா அச்சம் காரணமாக பல மாதம் ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 53 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் என மூன்று நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு செல்ல இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சென்னை வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 16 முதல் பயிற்சியில் ஈடுபடுவர் எனவும்.இந்த பயிற்சியில் தோனி, ரெய்னா மற்றும் பல வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் சென்னை வரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்