டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணி தோல்வி அடைந்த நிலையில், சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம் என்று கேப்டன் தோனி குறிப்பிட்டு இருக்கிறார்.
நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை மோசமாக தோல்வி அடைந்தது. இது ஐபிஎல் தொடரில் சென்னையின் இரண்டாவது தோல்வி ஆகும். மும்பைக்கு எதிரான முதல் போட்டியை வென்ற சென்னை அடுத்தடுத்து ராஜஸ்தான்,டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.
நேற்று நடந்த போட்டியில் டெல்லி 175 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின் இறங்கிய சென்னை 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.