வீட்டுக் கூரையில் முதலை

வீட்டுக் கூரையில் முதலை

பெல்காம்:

கர்நாடகாவின் பெல்காமில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட முதலை வீட்டுக்கூரையின் மீது இருந்ததால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சில நாட்களாக பெய்துவரும் கனமழையால், பெல்காம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளாக்காடாய் காட்சியளிக்கிறது. பெரும்பாலன மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பெல்காம் அடுத்த ரெய்பாக் தாலுகாவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மிகப்பெரிய முதலை ஒன்று நீரில் மூழ்கியுள்ள வீட்டின் கூரையில் அமர்ந்திருந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்