லண்டன்:
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், 14 லீக்க ஆட்டமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்த 9ம் தேதி நடந்த போட்டியில் அபார சதம் அடித்தார்.
இந்த போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலை தாக்கியது. அப்போதே சிகிச்சை அளித்து, தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார். வலியுடன் விளையாடிய தவான் சதம் அடித்தார்.
பின்னர் அவருக்கு வீக்கம் ஏற்பட்டு, தவான் பீல்டிங்கிற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா இறங்கினார்.
இந்நிலையில், தற்போது தவானின் கைவிரல் தற்போது வரை குணமாகாத நிலையில், 3 வாரத்திற்கு ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.