குர்தாபூர்:
பஞ்சாபில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், குர்தாப்பூர் அடுத்த பட்டலா பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 4ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 காமமடைந்ததாகவும் மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகவும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.