இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலவாடி பஞ்சாயத்தில் தமிழக அரசு சார்பில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்குவதற்கான பயற்சி நடைபெற்றது.
பாலவாடி கிராம பஞ்சாயத்தில் தேர்வான 50 பயனாளிகளுக்கு மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் சண்முக சுந்தரம் (பொறுப்பு) தலைமையில் இண்டூர் கால்நடை மருந்தகத்தில் பயிற்சி நடைபெற்றது.
மேலும், இந்த பயிற்சியில் மருத்துவர் வேடியப்பன் துணை இயக்குநர் தர்மபுரி, கால்நடை மருத்துவர்கள், சரவணன் கே.தசரதன், அருண் ஆனந்த் ஆகியோர்களால் பயிற்சியை சிறப்பாக நடத்தப்பட்டது.
மேலும் பாலவாடி பஞ்சாயத்து தலைவர் கணேசன், துணை தலைவர் மனோகரன் மற்றும் ஊராட்சி செயலர் ஜம்பேரி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.