அகமதாபாத்:
நாடுமுழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வெயிலிருந்து தப்பிக்க தன்னுடைய காருக்கு மாட்டுச்சாணத்தை பூசியுள்ளார் பெண் ஒருவர்.
அகமதாபாத்தை சேர்ந்த சேஜல் ஷாஜ் என்ற பெண், காரை குளுமையாக வைக்க ஏதுவாக தன்னுடைய காருக்கு மாட்டுச் சாணத்தை பூசியுள்ளார். அதை சமூக வலைத்தளத்திலும் பரவவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், காரை குளுமையாக வைத்துக்கொள்ள சாணத்தின் பயனைப்போல் மற்ற எதிலும் இல்லை. எவ்வளவுதான் வெயில் அடித்தாலும் குளுமையாகிவிடுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.