அனில் அம்பானிக்கு கெடு

  • In General
  • February 8, 2020
  • 186 Views
அனில் அம்பானிக்கு கெடு

மும்பை:

கடனை திருப்பி செலுத்த அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் மற்றும் அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின் பேரில் சீன வங்களிடமிருந்து ரூ.4,836 கோடி கடன் கொடுக்கப்பட்டது.

மும்பையில் உள்ள 3 கிளைகளிலிருந்து வாங்கிய கடனை திரும்ப செலுத்ததால், பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில்,
சீன வங்கிகளிடம் இருந்து 6 ஆயிரத்து 579 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாத வழக்கில், 711 கோடி ரூபாயை முதல் கட்டமாக 6 வாரங்களுக்குள் செலுத்துமாறு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உறவினர்களின் உதவியோடு கடனை திருப்பிச் செலுத்துமாறு அனில் அம்பானிக்கு கெடு விதித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்