செல்போன் பறித்த காதல் ஜோடி

செல்போன் பறித்த காதல் ஜோடி

சென்னை:

சென்னை, தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லிப்சா, இவர் கடந்த 12ம் தேதி தி.நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லிப்சாவின் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் லிப்சா புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் மூலம் செல்போன் பறிக்க பயன்படுத்திய பல்சர் பைக்கின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.

மேலும், தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது சைதாப்பேட்டை லாட்ஜ் பகுதியில் அவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ராஜீ, சுவேதா ஆகிய காதல் ஜோடிகளை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்