திருவனந்தபுரம்:
கேரளாவில் 3வது நபருக்கு ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏற்கனவே 2 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 3வது நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உறுதிப்படுத்தினார்.