சீனா:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர் ந்துள்ளது.
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் அ ச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு நகரத்தையே சீனா சீல் வைத்துள்ளது. மேலும், பல நகரங்களில் இந்த வைரஸ் தாக்கத்தால், 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ம் உற்சாகமாக நடைபெற்றுவரும் நிலையில், வுஹ £ன் உள்ளிட்ட 14 நகரங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.