சென்னையில் பரிசோதனை மையம்

  • In General
  • January 30, 2020
  • 211 Views
சென்னையில் பரிசோதனை மையம்

புதுடெல்லி:

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை பரிசோதிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 21 விமான நிலையங்களில் 234 விமானங்கள், 43346 பயணிகள் பரிசே £திக்கப்படுள்ளனர். நாளை முதல் சென்னை உள்ளிட்ட மேலும் 6 நகரங்களிலும், பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில், கிங் இன்ஸ்டியூட்டில் பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் என தமிழக சுக £தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்