புதுடெல்லி:
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை பரிசோதிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை 21 விமான நிலையங்களில் 234 விமானங்கள், 43346 பயணிகள் பரிசே £திக்கப்படுள்ளனர். நாளை முதல் சென்னை உள்ளிட்ட மேலும் 6 நகரங்களிலும், பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில், கிங் இன்ஸ்டியூட்டில் பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் என தமிழக சுக £தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.