பிப்., 3ல் கூட்டுறவு சங்கத் தேர்தல்

  • In Chennai
  • January 10, 2020
  • 167 Views
பிப்., 3ல் கூட்டுறவு சங்கத் தேர்தல்

சென்னை:

தமிழகத்தின் 1,028 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு பிப்ரவரி 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1,028 கூட்டுறவு சங்கங்களில் 11,368 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 27ம் தேதியுமம், வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 28ம் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 29ம் தேதியும் வெளியிடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3,102 இடங்கள் பெண்களுக்கும், 2068 இடங்கள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழநாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்