வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து!

வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து!

குன்னூர்:

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது.

இங்கு ராணுவத்திற்கு தேவையான குண்டுகளுக்கு பயன்படும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை, தொழிற்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் அதிக அழுத்தம் காரணமாக வெடிவிபத்து ஏற்படடது.

இந்த விபத்தில், சூரஜ்குமார், ராபின், நாகராஜ் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 3பேர் தீவிர சிகிச்சைகாக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்