பாலத்தில் கண்டெய்னர் லாரி விபத்து

பாலத்தில் கண்டெய்னர் லாரி விபத்து

சேலம்:
சேலம் கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று தடுப்புச்சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் 2 கிலோ அளவுக்கு போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

வடமாநிலத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் அதிகமாக காணப்பட்டதால் கந்தம்பட்டி மேம்பாலத்தில் லாரி சென்றபோது தடுப்புச் சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்லாத நிலை ஏற்பட்டது. சேலம், கோவை கந்தம்பட்டி நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அப்படியே நின்றது.

விபத்து பற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து முழுமையாக சரி செய்யப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்