கர்நாடக எம்எல்ஏக்கள் விவகாரம்: நாடாளுமன்றம் முன் காங்., போராட்டம்!

கர்நாடக எம்எல்ஏக்கள் விவகாரம்: நாடாளுமன்றம் முன் காங்., போராட்டம்!

புதுடெல்லி:

கர்நாடக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் பா.ஜ.,வை கண்டித்து நாடாளுமன்ளம் முன் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக காங்கிரஸ் மஜத எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மும்பை ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்ட்டார்.

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகரை கண்டித்து நேற்று பா.ஜ.வினர் விதான்சவுதா முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பா.ஜ.வை கண்டித்து காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கர்நாடக எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.வை கண்டித்து நாடாளுமன்றம் முன், சோனியா காந்தி தலைமையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்