புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்டது.
இந்நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா அளித்ததாகவும், அதனை கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.