புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின், தற்போது பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை.
தொடர்ந்து ராகுல்காந்தி மறுத்துவந்த நிலையில், இடைக்கால தலைவராக சோனியா காந்தியை, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையிடமான அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்தில் சோனியா காந்தி பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை தற்போது மாற்றப்பட்டுள்ளது.