‘‘ராகுல் பதவி விலகக்கூடாது’’ காங்., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..!

‘‘ராகுல் பதவி விலகக்கூடாது’’ காங்., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..!

சேலம்:

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததையடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உறுதியுடன் இருப்பதால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் அருகே பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து, உடலில் எண்ணைய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி தீக்குளிக்க முயன்ற அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்