எங்க கட்சி வறுமையில் இருக்கு.. கே.எஸ்.அழகிரி

எங்க கட்சி வறுமையில் இருக்கு.. கே.எஸ்.அழகிரி

மதுரை:
காங்கிரஸ் கட்சி மிகவும் வறுமையில் உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயகுமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் சாமானிய தொண்டர் ஒருவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ரூபிமனோகரன் கோடீஸ்வரர் ஆவார்.
காங்கிரஸ் கட்சியில் பணக்காரர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும்.

காங்கிரசில் உள்ளவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள்தான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது பற்றி காங்கிரஸ் தமிழக தலைவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி மிகவும் வறுமையில் உள்ளது. அதிமுக போன்று பணத்தை இறைக்கும் கட்சி நாட்டிலேயே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்