பெங்களூரு:
கர்நாடகாவில் 12 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக கூடியது.
இந்த கூட்டத்துக்கு துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்புவிடுத்துள்ளனர்.
இதனால், கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு கவிழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.