புதுடெல்லி:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஒடிஷா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், உத்தரப்பிரதேச காங்கிர் தலைவர் ராஜ்குமார், அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா, கர்நாடக காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பாட்டீல் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த ராஜினாமாவால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.