சென்னை:
நடிகர் விஜயின் தந்தையும் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்திற்காக தமிழ்நாட்டு உரிமையை கொடுப்பதாக, சுமார் ரூ.21 லட்சம் மோசடி செய்துவிட்டதாக மணிமாறன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும் எனக் கூறுகிறார். எனவே ரூ.21 லட்சத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமிருந்து பெற்றுத்தருமாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.