‘தர்பார்’ ரீலீசாகியும் வழக்கு

  • In Cinema
  • January 11, 2020
  • 171 Views
‘தர்பார்’ ரீலீசாகியும் வழக்கு

தூத்துக்குடி:

‘தர்பார்’ படத்தில் போலீசை புண்படுத்தும் விதமாக நடித்துள்ளதாக ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் மீது முன்னாள் பாதுகாப்பு படை வீரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘தர்பார்’ படத்தில் சீருடை பணியாளர்களை புண்படுத்தும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த், தாடியுடனும், ஹிப்பி தலையுடன் நடித்துள்ளார். மேலும் ‘‘நான் கமிஷனர் அல்ல ரவுடி’’ என வசனம் பேசியுள்ளாரர்.

இது போலீசாரையும் ராணுவத்தினரையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரரன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப்படை வீரர் மரிய மைக்கேல் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

‘தர்பார்’ வெளியீட்டுக்கு முன்பே வழக்குகள் போடப்பட்டு, தற்போது அது சம்பந்தமாக மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது படம் ரீலீசாகியும் வழக்கு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்