அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்..!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்..!

சென்னை:

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெய்ர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, பா.ஜ., அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் கடும கண்டனத்தை தெரிவித்திருந்தனர். மேலும், கமலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.

மேலும், அரவக்குறிச்சி உள்ளிட்ட 13 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி பிரிதர்ஷிணி, நாக்கை அறுக்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்