மதுமிதா மீது போலீசில் புகார்

  • In Cinema
  • August 21, 2019
  • 206 Views
மதுமிதா மீது போலீசில் புகார்

சென்னை:

அதிக சம்பளம் கேட்டு மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

‘பிக்பாஸ் 3’யில் கலந்துகொண்ட நடிகை மதுமிதா, கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தற்கொலை முயற்சி செய்ததாக அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

போட்டியிலிருந்து வெளியேறிய மதுமிதா, பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கில் காவிரி பிரச்சனை தொடர்பாக கருத்து கூறியதுதான் பிரச்சனை என தெரிவித்திருந்தார். அதனால் தான் அவர் கையை அறுத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்