சென்னை:
கமல் தன்னிடம் வாங்கிய ரூ.10 கோடியை திருப்பித்தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.
கடந்த 2015ல் கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ படத்திற்கு சில சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, சிக்கலை சரிசெய்ய தன்னை அனுகியதாக ரூ.10 கோடியை கமலுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக ஞானவேல் ராஜாவிடம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் ரூ.10 கோடியை கமல்ஹாசன் திருப்பித்தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.
கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.