கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்குப்பதிவு..!

கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்குப்பதிவு..!

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பாஜ.,வின் அளித்த புகாரின் பேரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல் மீது நாடுமுழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், இவரின் பேச்சு இரு சமுதாயத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சென்னை மடிப்பாக்கம் காவல்நிலையத்திலும் பா.ஜ., இளைஞரணி தலைவர் குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டடோர் இந்த புகார் மனுவை அளித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்